
முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் தனது முதல் போட்டியில் இந்திய அணி அனுபவமில்லாத ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள். ஆனால் ஒரு மோசமான மூன்றாம் தர அணி இப்படி தானே தோற்கும். இளம் சுரேஷ் ரைனா- வை நம்மால் குறை கூற முடியாது. பந்து வீச்சாளர்கள் செய்யும் தவறுக்கு அணி தலைவர் என்ன தான் செய்ய முடியும்.
முக்கியமாக அணி தேர்வு சரி இல்லாமல் இருந்தால் அணி தோல்வி அடைய தானே செய்யும். அனுபவமில்லா முரளி விஜயின் தேர்வு மிக பெரிய தவறு. அவருக்கு பதில் ராபின் உத்தப்பா-வை தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருடன் விராத் கொஹ்லி ஆட்டத்தை தொடங்க பின்பு சுரேஷ் ரைனா களம் இறங்க வேண்டும். யுவராஜ்க்கு மாற்று தமிழக வீரர் பத்ரிநாத் தான். ஆனால் அவர் அணியில் தேர்வு செய்ய படவில்லை. நான்காவதாக பத்ரிநாத் பின்பு ரோஹித் ஷர்மா , தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ஜடேஜா களம் இறங்க வேண்டும். வேக பந்து வீச்சாளர்களில் இர்பான் பதானை அணியில் சேர்த்து அவரும், அசோக் திண்டா, வினய்குமார் போன்ற வீரர்கள் இருந்தால் அணி வென்று இருக்கும்.
இந்திய அணியில் மிஸ்ரா, ஒஜா, ஜடேஜா, அஷ்வின் என எதற்கு நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள். இதை போன்ற மொக்கை அணி எப்படி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்க முடியும். இவர்கள் இறுதி போட்டிக்கு சென்றாலே அதிசயம்தான்.
No comments:
Post a Comment