
விஜய் நடித்து கடைசியாக வந்த சில படங்கள் தங்களுக்கு பெருத்த நஷ்டம் கொடுத்து விட்டதாகவும், அதை ரஜினி, மணிரத்தினம் போல விஜய் ஈடுகட்ட வேண்டும் என்றும் திரை அரங்க உரிமையாளர்கள் சரமாரி புகார் கூறி கொண்டு உள்ளனர்.
அய்யா! திரை அரங்க உரிமையாளர்களே உங்கள் வசதிக்கு ஒரு விஷயத்தை சுத்தமாக மறந்தோ அல்லது மறைத்தோ பேசுகிறீர்கள். பாபா படத்தின் தயாரிப்பாளர்களில் ரஜினியும் ஒருவர். இருவர் திரைபடத்தின் தயாரிப்பாளர் மணிரத்தினம். அதனால் இருவரும் நஷ்டஈடு கொடுத்தனர். ஆனால் விஜய் எனக்கு தெரிந்து இதுவரை எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
விஜய்காக தானே நாங்கள் படத்தை சிறப்பு காட்சி கூட பார்க்காமல் வாங்கினோம் என்றால் அதற்கு உங்கள் பேராசை தான் காரணம். சிறப்பு காட்சி பார்த்து தான் வாங்குவோம் என்று கூறி, தம்மால் வாங்க முடியாமல் வேறு திரை அரங்கில் வெளியிட்டு அவர்கள் லாபம் சம்பாதித்து விடுவார்களோ என்ற எண்ணம் தான் காரணம். இதற்கும் விஜய் பொறுப்பேற்க முடியாது.
இதுவரை விஜய் நடித்த பல படங்கள் மூலம் சம்பாதித்த லாபத்தில் ஒரு பங்கை விஜய்க்கு நீங்கள் கொடுத்து இருந்தால், இப்போதைய உங்கள் மிரட்டலை அனைவரும் ஆதரிக்க முடியும். லாபத்தில் நான் பங்கு தர மாட்டேன், ஆனால் நட்டம் வந்தால் நீ பங்கு கொடுக்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம். இதற்கு பேர் கட்ட பஞ்சாயத்து! அல்லவா.
No comments:
Post a Comment