
தமிழக அரசியல் உலகில் சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்ட காட்சி நடப்பதை பார்த்து அனைவரும் முகம் சுளிக்கும் அருவருக்க தக்க காட்சிகள் நடக்கிறது. கூட்டணிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் பொத்திகிட்டு இருந்தா அடுத்த ராஜ்யசபாவில் வாய்ப்பு என கருணாநிதி செக் வைக்க, அரண்டு போன ராமதாஸ் தன் கட்சியில் உள்ள தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து அனைவரையும் கருணாநிதி காலில் விழ வைத்து கொண்டு இருக்கிறார்.

கருணாநிதி எதை எதிர் பார்த்தாரோ அதை தான் ராமதாஸ் கட்சியை சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடன், மைனாரிட்டி (நன்றி: 'செல்வி'.ஜெயலலிதா) திமுக அரசு பதவியில் இருப்பது தங்களால் தான் என்பது போல் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடிய ராமதாசை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியில் அனுப்பிய கருணாநிதி, அவர்கள் குணத்திற்கு கண்டிப்பாக ஜெயலலிதாவிடம் உதைபட்டு தன் காலில் வந்து விழுவார்கள் என எதிர்பார்த்தார். அதை போல தற்போது அரசியல் அனாதை ஆக உள்ள ராமதாசும் வேறு வழி இல்லாமல் கருணாநிதியிடம் மண்டியிட்டு அவர் எப்போது பிச்சை போடுவார் என தட்டை பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான். நடுவில் முன்பு போல ஆடினால் மீண்டும் கெட்-அவுட் தான்.
No comments:
Post a Comment