1984ம் ஆண்டு திசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த வழக்கு கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே வந்து இப்போது ஒரு கேவலமான தீர்ப்பு வந்து உள்ளது. பாமர மக்கள் ஏற்கனவே நீதி துறையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து கொண்டு வருகிறார்கள். உதாரணம் , ருச்சிகா தற்கொலை வழக்கு, அப்துல் கலாம் அவர்களுக்கு கைது வாரன்ட்.
தற்போது, அவர்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்த மேலும் ஒரு தீர்ப்பாக போபால் வழக்கு அமைந்து உள்ளது.
இந்த வழக்கில் ஏழு பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை. இந்த தீர்ப்புக்கு பேசாமல் அனைவரையும் விடுதலையே செய்து இருக்கலாம்.
ஏன், என்றால் இந்த தீர்ப்பை குற்றம் சாற்ற பெற்றவர்கள் மேல் முறையீடு செய்யலாமாம். இந்த தீர்ப்பு வருவதற்கே 26 ஆண்டுகள் என்றால், இவர்கள் மேல் முறையீடு செய்து அந்த தீர்ப்பு வருவதற்குள் இவர்கள் அனைவருமே உயிருடன் இருக்க மாட்டார்கள் (இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் உயிருடன் இல்லை).
மேலும், இந்த நிறுவனத்தின் தலைவர் மீது தீர்ப்பில் ஒரு வரி கூட குற்றம் சாட்டப்படவில்லை. 1984ம் ஆண்டே அவர் ஜாமீனில் வெளிவந்து, தனி விமானத்தில் நியூயார்க் சென்றவர், அங்கே சொகுசு தீவில் உல்லாசமாக இருக்கிறார். இங்கே அவர் பெயர் தேடப்படும் குற்றவாளியாக காகிதத்தில் மட்டும் உள்ளது.
பெரியண்ணன் அமெரிக்காவும் அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என தெனாவட்டாக சொல்லி கொண்டு உள்ளது. ஒரு இந்தியன் இதே போல அமெரிக்காவில் ஒரு குற்ற செயல் செய்து விட்டு இந்தியாவில் உல்லாசமாக இருந்தால், அமெரிக்கா சும்மா விட்டு விடுமா. எங்கள் நாட்டுக்கு இந்தியாவால் ஆபத்து என்று சொல்லி நம் மீது அணு ஆயுதங்களை வீசி இருக்கும். ஆனால் நாம் இன்னும் அமெரிக்காவின் காலை நக்கி கொண்டு உள்ளோம்.
கடைசியாக, நம்மை ஆள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ராஜீவ் காந்தியை படுகொலை செய்தார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, அண்டை நாட்டில் ஒரு இனத்தையே அழிக்க உதவி செய்து, அந்த நாட்டு அதிபருக்கு விருந்து வைத்து உள்ளம் குளிர்ந்தீர்களே. அதை போல தங்கள் கணவரை, மனைவியை, சகோதர, சகோதரியை இழந்தவர்கள் தங்களால் இயன்ற வழியில் பழி வாங்க தொடங்கினால் நாடு நாடாக இருக்காது, சுடுகாடாக மாறி விடும்.
No comments:
Post a Comment